2008ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளின் போது தன்னுடைய போர்வியூகங்களுக்கு திட்டமிட்ட இடையூறு விளைவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக Sarath Fonseka பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவரது குற்றச்சாட்டின் படி, அந்நாளைய ஜனாதிபதி Mahinda Rajapaksa, பாதுகாப்புச் செயலாளராக இருந்த Gotabaya Rajapaksa மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி Wasanta Karannagoda ஆகியோர் பாதுகாப்பு பேரவைக் கூட்டங்களின் போது தனது போர்க்களத் திட்டங்களுக்கு முரணான ஆலோசனைகளை முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, வெலிஓயா பகுதியில் விடுதலைப் புலிகளை நான்கு திசைகளிலிருந்தும் முற்றுகையிடும் தனது வியூகத்துக்கு பதிலாக, வவுனியாவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி நேரடியாக முன்னேற வேண்டும் என அவர்கள் அழுத்தம் தந்ததாக பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இத்தகைய செயற்பாடுகள் இராணுவ வெற்றியை தாமதப்படுத்தவும், தன்னை மனச்சோர்வடையச் செய்யவும் செய்யப்பட்ட முயற்சிகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், 2009 மே 17ஆம் தேதி யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்களை விளக்கிக் கூறிய அவர், விடுதலைப் புலிகளின் தோல்வி உறுதியான நிலையில் அதன் தலைவர்களான Velupillai Prabhakaran மற்றும் Pottu Amman ஆகியோரின் உயிரைக் காப்பாற்ற முயற்சிகள் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து, புலிகளின் தலைவர்கள் மூன்றாம் தரப்பிடம் சரணடைய வழிகள் அமைக்கப்பட்டதாகவும், இது புலிகளை முற்றிலும் தோற்கடிக்க வேண்டும் என்ற தனது நேரடி உத்தரவுக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, “வெள்ளைக் கொடி” விவகாரம் தமக்கு எதிராக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதி எனவும், சரணடைந்தவர்களை சுடுமாறு தாம் ஒருபோதும் உத்தரவிடவில்லை என்றும் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக