நடிகை தன்ஷிகா தமிழில் பேராண்மை, மாஞ்சா வேலு, பரதேசி, கபாலி போன்ற பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். 36 வயதாகிய தன்ஷிகா விரைவில் நடிகர் விஷாலை திருமணம் செய்ய உள்ளார். அவர்களின் நிச்சயர்தம் கடந்த வருடமே நடைபெற்றது.
டி. ராஜேந்தர் பேச்சால் ஏற்பட்ட மன அழுத்தம்
விழித்திரு பட விழாவில் தன்ஷிகா மேடையில் இருந்த டி. ராஜேந்தர் பெயரை சொல்ல மறந்துவிட்டார். இதையடுத்து டி. ராஜேந்தர் தன்ஷிகாவை கண்டபடி விமர்சித்து, ரஜினியுடன் நடித்தால் டி.ஆர் பெயரை தெரிந்து கொள்ள வேண்டியது, மேடை நாகரிகம் தெரியவில்லையா, பெரிய படத்தில் நடித்தால் நீ பெரிய நடிகையா போன்ற விமர்சனங்களைச் சுட்டிக்காட்டினார்.
இதனால் தன்ஷிகா மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தன்ஷிகாவின் பதில்
தன்ஷிகா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது:
"அவர் அப்படி பேசியது ரொம்ப கஷ்டமாக இருந்தது. மன அழுத்தத்தால் ஒரு வாரம் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. பப்லிசிட்டிகாக அப்படி செய்ததாக பலரும் சொன்னார்கள். ஆனால் அப்படி இருந்தால் நான் ஏன் ஒரு வாரம் அப்படி இருந்திருக்க போகிறேன்."
இதன் மூலம் தன்ஷிகா நேர்ந்த மன அழுத்தத்தையும், அந்த சம்பவத்தின் தாக்கத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக