வவுனியா, செட்டிகுளம் பகுதியில் இன்று (27-01-2026) இடம்பெற்ற வீதி விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மன்னாரில் இருந்து மாதவாச்சி நோக்கி பயணித்த கூலர் ரக வாகனமும், மாதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனமும் செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் நேருக்கு நேர் மோதியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செட்டிகுளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து, வீதியில் நின்ற கட்டாக்காலி மாடுகளின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக