2026 டி20 உலகக்கோப்பை தொடர் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், கிரிக்கெட் உலகம் எதிர்பாராத திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. இந்தியாவில் விளையாட பாதுகாப்பு காரணங்களுக்காக மறுப்பு தெரிவித்த வங்கதேச அணியை ஐசிசி (ICC) தொடரிலிருந்து நீக்கியது. ஆனால், தற்போது பாகிஸ்தான் எடுக்கப்போகும் ஒரு முடிவால் வங்கதேசம் மீண்டும் உள்ளே வர வாய்ப்பு உருவாகியுள்ளது.
வங்கதேசத்தின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), இந்தத் தொடரை புறக்கணிப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் கிரிக்கெட் வாரியத் தலைவருமான மொஹ்சின் நக்வி, வங்கதேசம் நீக்கப்பட்டதை "அநீதி" என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்புடன் ஆலோசித்து வரும் நக்வி, வரும் திங்கட்கிழமைக்குள் இறுதி முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாற்றுத் திட்டம் என்ன?
ஒருவேளை பாகிஸ்தான் தொடரிலிருந்து விலகினால், அவர்களுக்குப் பதிலாக 'ஏ' பிரிவில் வங்கதேசம் சேர்க்கப்படும். ஐசிசி-யின் புதிய ஏற்பாட்டின்படி, வங்கதேசம் தனது அனைத்துப் போட்டிகளையும் இந்தியாவில் விளையாடாமல் இலங்கையில் விளையாட அனுமதிக்கப்படும். இது வங்கதேசத்தின் பாதுகாப்பு கவலைகளைப் பூர்த்தி செய்யும் என்பதால், ஐசிசி இந்த மாற்றுத் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக