பங்களாதேஷின் நர்சிங்டி பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றி வந்த 23 வயது இளைஞர் சஞ்சல் சந்திரா, நள்ளிரவில் மர்ம நபர்களால் கடையோடு சேர்த்து தீயிட்டுக் கொளுத்தப்பட்டார். விபத்து என்று கருதப்பட்ட இந்தச் சம்பவம், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது திட்டமிட்ட படுகொலை என்பது தெரியவந்துள்ளது. தந்தையை இழந்து தாயையும், உடல்நலம் குன்றிய சகோதரர்களையும் காப்பாற்றி வந்த ஒரு இளைஞரின் வாழ்வு இப்படி முடிந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுபான்மையினர் மீதான இத்தாக்குதல் சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்று வருகிறது.
செய்திகள்
பங்களாதேஷ் அதிர்ச்சிச் சம்பவம்: இளைஞர் உயிருடன் எரித்துக் கொலை!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக