2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக
அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான தகவல்,
மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் முன்வைத்த கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டும்,
போயா குழுவின் பரிந்துரைக்கு அமையவும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில்,
போயா குழு கூட்டமொன்று நடத்தப்பட்டு,
மே 30 ஆம் திகதியே 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வை நடத்துவதற்கு
இணக்கம் வெளியிட்டுள்ளதாகவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன மேலும் தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம்,
2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வுக்கான உத்தியோகபூர்வ திகதி உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2026 அரச வெசாக் நிகழ்வு மே 30 ஆம் திகதி நடைபெறும் – அரசு அறிவிப்பு
மல்வத்து, அஸ்கிரிய உள்ளிட்ட மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு அமைய, 2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் நிகழ்வு மே 30 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன அறிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக