BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை . இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை . இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 14 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் புள்ளிவிபரங்களின்படி, 2026ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மொத்தமாக 1,468,980 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, ஆகஸ்ட் மாதத்தின் முதல் 18 நாட்களில் மாத்திரம் 125,562 சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள இந்த அதிகரிப்பு, நாட்டின் சுற்றுலாத்துறையில் தொடர்ச்சியான வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை வெளிப்படுத்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதிக்குள் 25 இலட்சம் சுற்றுலாப்பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பது என்ற அரசாங்கத்தின் இலக்கு எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னரே நிறைவேற்றப்படும் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருவதன் மூலம் நாட்டின் சுற்றுலாத்துறை மற்றும் அதனுடன் தொடர்புடைய பொருளாதார நடவடிக்கைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"