BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்; பெற்றோரின் நெகிழ்ச்சியான முடிவு

வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானம்; பெற்றோரின் நெகிழ்ச்சியான முடிவு

சென்னையில் மூளைச்சாவு அடைந்த 1½ வயது குழந்தையின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிறந்து 1 வயது 7 மாதங்களே ஆன குழந்தை, ஹைட்ரோசெபாலஸ் எனப்படும் பிறவிக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 நாட்களாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது.

குழந்தையின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்த நிலையில், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பின்னர் குழந்தை மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, துயரமான சூழ்நிலையிலும் குழந்தையின் உடல் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் முன்வந்தனர்.

அதன்படி, குழந்தையிடமிருந்து இதயம் மற்றும் சிறுநீரகம் தானமாக பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகக் குறைந்த வயதில் உறுப்பு தானம் செய்யப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது.

பெற்றோரின் இந்த மனிதநேய முடிவு, துயரத்திலும் பிற உயிர்களுக்கு வாழ்வளிக்கும் நெகிழ்ச்சியான செயலாக பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"