தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் குமார், தற்போது திரைப்படங்களைத் தாண்டி கார் பந்தயத்திலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதேவேளை, அவரது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய திரைப்படத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திரைப்படங்களுக்குப் பிறகு அஜித் நடிக்கவுள்ள மற்றொரு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலியின் உதவியாளர் ஒருவர் கூறிய கதை அஜித்துக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், அந்தக் கதையில் நடிக்க அவர் சம்மதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் இப்படத்தை வெளியிடும் வகையில் பான் இந்தியா திரைப்படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனினும், இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இயக்குநர், படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனம் உள்ளிட்ட முக்கிய தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரே உறுதி செய்ய முடியும்.
அஜித்தின் அடுத்தடுத்த திரைப்படங்கள் தொடர்பான இந்த தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக