வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் பக்தி பரவசத்துடன் நடைபெற்று வரும் நிலையில், எட்டாம் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
எட்டாம் திருவிழாவை முன்னிட்டு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, வேல் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதராக மகர வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆலய வெளிவீதிகளில் எழுந்தருளிய சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். யாழ்ப்பாணம் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் நல்லூர் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தின் அடுத்த முக்கிய நிகழ்வாக நாளை புதன்கிழமை 10ஆம் திருவிழாவான மஞ்சத் திருவிழா மாலை 4.45 மணிக்கு நடைபெறவுள்ளது.
மஞ்சத் திருவிழாவிலும் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு நல்லூர் கந்தனை தரிசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக