நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விசேட கைது நடவடிக்கை நேற்றைய தினம் (23.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சுற்றிவளைப்பின் போது,
30,236 பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன்,
அவர்களில் 17 பேர் குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும்,
கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட பிடியாணைகளின் அடிப்படையில் 256 பேர்,
திறந்த பிடியாணைகளின் அடிப்படையில் 200 பேர்
கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும்,
இவ்வாறான நடவடிக்கைகள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக