இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தற்போதைய அரசாங்கத்தினால் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக மூத்த சட்டத்தரணி அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் ராஜபக்ச குடும்பத்தினருக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் இந்த விவகாரத்தில் அதிக கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை மற்றும் காணாமல் போனோர் தொடர்பான விவகாரங்களில் அரசாங்கம் மௌனம் காப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையின் இனவாத கட்டமைப்பிலிருந்து அரசாங்கம் முழுமையாக விடுபடுவதற்கு தயாராக இல்லை எனவும் அருண் கணநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு உள்ளக விசாரணைகளை மாத்திரம் நம்புவதற்கு பதிலாக, சர்வதேச பொறிமுறை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலையீடு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் மற்றும் அதன் அரசியல் தாக்கங்கள் குறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக