பாணந்துறை வலான ஊழல் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றி வந்த 28 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், இன்று அதிகாலை தனது சேவைத் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அதிகாரி உடனடியாக பாணந்துறை தெற்கு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் பேராதனை பகுதியைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவருக்கு வழங்கப்பட்டிருந்த டி-56 ரக சேவைத் துப்பாக்கியே இந்தச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். உயிரிழப்புக்கான காரணம் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து சூழ்நிலைகளும் விசாரணையின் மூலம் கண்டறியப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக