இலங்கை சுங்க சேவையில் காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறை (Paperless Customs Declaration Processing System) எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். புதிய நடைமுறை மூலம் சுங்க சீராக்கல் செயல்முறையை வேகமாகவும், திறமையாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LankaSign டிஜிட்டல் கையொப்பம் மற்றும் ASYCUDA அமைப்பு ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம் சுங்க ஆவணங்களை சட்டபூர்வமாகவும் பாதுகாப்பாகவும் இணையவழியில் சமர்ப்பிக்க முடியும்.
மேலும், டிஜிட்டல் கையொப்பமிட்ட பின்னர் மேற்கொள்ளப்படும் மாற்றங்களை கணினி அமைப்பு கண்டறியக்கூடியதால் மோசடி மற்றும் ஊழலுக்கான வாய்ப்புகள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய டிஜிட்டல் நடைமுறையால் சுங்க சீராக்கல் முகவர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாது என்றும், தொழிலின் தன்மை மாத்திரம் மாற்றமடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக