இலங்கைக்கான சீனத் தூதுவராக தனது பதவிக்காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாட்டை விட்டு பிரியாவிடை பெறவுள்ள கீ சென்ஹொங், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துவதில் சீனத் தூதுவர் ஆற்றிய பங்களிப்புக்கு சஜித் பிரேமதாஸ நன்றியைத் தெரிவித்ததுடன், அவரது எதிர்காலப் பணிகளும் முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடுகள், வர்த்தகத் தொடர்புகள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகளை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பாக இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
இலங்கை மற்றும் சீனாவுக்கு இடையிலான பரஸ்பர நன்மை பயக்கும் நட்புறவையும், ஆக்கப்பூர்வமான கூட்டாண்மையையும் தொடர்ச்சியாகப் பேணிப் பாதுகாப்பதன் அவசியத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இந்தச் சந்திப்பில் மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக