BREAKING
மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் இருக்கைகள் தொடர்பாக அவசர பரிசோதனை – அமெரிக்க FAA எச்சரிக்கை இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையை விட்டு பிரியும் சீனத் தூதுவர் சஜித் பிரேமதாஸவை சந்திப்பு மகனுடன் கடற்கரையில் அசத்தல் நடனம் ஆடிய பிரபுதேவா சூப்பர் சிங்கர் ஹரிப்ரியாவை ஞாபகம் இருக்கா? வைரலாகும் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் இருக்கைகள் தொடர்பாக அவசர பரிசோதனை – அமெரிக்க FAA எச்சரிக்கை இலங்கை சுங்க சேவை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கல்; ஒக்டோபர் 1 முதல் புதிய நடைமுறை பதவிக்காலத்தை நிறைவு செய்து இலங்கையை விட்டு பிரியும் சீனத் தூதுவர் சஜித் பிரேமதாஸவை சந்திப்பு

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு விவசாயி ஒருவர் உயிரிழப்பு

மதவாச்சி வனப்பகுதியில் துப்பாக்கிச் சூடு விவசாயி ஒருவர் உயிரிழப்பு

அநுராதபுரம் மாவட்டம், மதவாச்சி – கரம்பன்குளம் வனப்பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நேற்று புதன்கிழமை (21) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதில் உயிரிழந்தவர், மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய விவசாயி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டில் கடுமையாக காயமடைந்த நிலையில், குறித்த விவசாயியை மதவாச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில்,

கரம்பன்குளம் வனப்பகுதிக்கு அருகில் மருதாணி பயிரிட்டுக் கொண்டிருந்த போது,

விவசாய நோக்கங்களுக்காக வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில்,

இந்த உயிரிழப்பு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக,

மதவாச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"