கனடாவும் கிரீன்லாந்தும் சுயாதீனமாகவும் தன்னாட்சியுடனும் தொடர வேண்டும் என அமெரிக்கர்களின் பெரும்பான்மையினர் விரும்புகின்றனர் என, புதிய கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
இந்த கருத்துக்கணிப்பு ஜனவரி 13 முதல் 15 வரை, அமெரிக்கப் பெருநிலப்பகுதியில் வசிக்கும் 1,002 குடிமக்களிடம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டுள்ளது.
அதில்,
66 சதவீதமான அமெரிக்கர்கள், கனடா ஒரு சுயாதீன நாடாகவே தொடர வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
56 சதவீதமானவர்கள், டென்மார்க்கின் தன்னாட்சி பிரதேசமாக உள்ள கிரீன்லாந்து தனது தற்போதைய நிலையைத் தொடர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்தக் கணிப்பில்,
17 சதவீதமானவர்கள் மட்டுமே, கனடாவை அமெரிக்காவின் ஒரு மாநிலமாக அல்லது பிரதேசமாக இணைக்க வேண்டும் என ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, 23 சதவீதமானவர்கள், கிரீன்லாந்தை அமெரிக்க பிரதேசமாக அல்லது மாநிலமாக மாற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், தனது இரண்டாவது பதவிக்காலத்தில், விரிவாக்க (Expansionist) அரசியல் நோக்கங்களை தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்.
அவர்,
கனடாவை அமெரிக்காவின் 51-ஆவது மாநிலமாக மாற்ற வேண்டும் என பலமுறை கருத்து தெரிவித்துள்ளார்.
அதேபோல், தேசிய பாதுகாப்பை காரணமாகக் காட்டி, கிரீன்லாந்தையும் அமெரிக்காவுடன் இணைத்துக் கொள்ளும் விருப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கனடா, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்றும் நேட்டோ (NATO) பாதுகாப்பு கூட்டணியின் நட்பு நாடுகளாக உள்ள நிலையில்,
கனடாவும் டென்மார்க்கும் ட்ரம்பின் இந்த விரிவாக்க முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள்,
ட்ரம்பின் விரிவாக்கக் கொள்கைகளுக்கு அமெரிக்க மக்களிடையே பரவலான ஆதரவு இல்லை என்பதையும்,
நட்பு நாடுகளின் சுயாதீனத்தை மதிக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அமெரிக்கர்களிடையே வலுவாக உள்ளது என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக