மாலைதீவில் உள்ள வேலனா சர்வதேச விமான நிலையத்தில் (Velana International Airport) இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களை, 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்க அந்நாட்டு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 10-ஆம் திகதி அதிகாலை வேளையில் ஏற்பட்ட இந்த மோதல் தொடர்பாக 46 மற்றும் 43 வயதுடைய இரண்டு இலங்கையர்கள் ஆரம்பத்தில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டனர். அப்போது விசாரணைக்குப் பின்னர் எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட போதிலும், வழக்கின் தீவிரத்தைக் கருத்திற் கொண்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக