வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் கும்பல் தலைவன் ஒருவனின் நெருங்கிய சகா, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அநுராதபுரம், மீகலேவ - சியம்பலன்கமுவ பிரதேசத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை (20) இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இவர் பிடிபட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து அபாயகரமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக