BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம்

சிக்கன் ஈரலா? ஆட்டு ஈரலா? உடல்நலத்திற்கு எது சிறந்தது என்று நிபுணர்கள் கூறும் விளக்கம்

கோழி ஈரல் மற்றும் ஆட்டு ஈரல் இரண்டுமே அதிகளவிலான புரதம், இரும்புச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்களை கொண்ட சத்தான உணவுகளாகக் கருதப்படுகின்றன. இருப்பினும், இவற்றின் ஊட்டச்சத்து அளவுகளில் காணப்படும் சில வேறுபாடுகள் காரணமாக, எந்த வகை ஈரலை எவ்வளவு அளவில் சாப்பிட வேண்டும் என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

100 கிராம் சிக்கன் ஈரல் மற்றும் ஆட்டு ஈரலில் சுமார் 160 முதல் 170 கலோரிகள், 20 முதல் 25 கிராம் புரதம் மற்றும் சுமார் 5 கிராம் கொழுப்பு காணப்படுகின்றன. அதேபோல், இரண்டிலும் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பதால், அளவோடு மட்டுமே உட்கொள்ள வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

ஊட்டச்சத்து அடிப்படையில், ஆட்டு ஈரலில் வைட்டமின் பி12 அதிகமாக காணப்படுவதுடன், சிக்கன் ஈரலில் வைட்டமின் ஏ சத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது. உடலுக்கு வைட்டமின் ஏ அவசியமான ஊட்டச்சத்தாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்வது கல்லீரல் பாதிப்பு, தலைவலி மற்றும் பிற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனவே, சிக்கன் ஈரலை அதிகளவில் அடிக்கடி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், ஆட்டு ஈரல் மற்றும் சிக்கன் ஈரல் இரண்டையும் அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுவாக, ஆரோக்கியமான பெரியவர்கள் வாரத்திற்கு 100 முதல் 200 கிராம் வரை மட்டுமே ஈரலை உட்கொள்வது பொருத்தமானதாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கு சுமார் 50 கிராம் போதுமானதாகும். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பாக கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களில், வைட்டமின் ஏ அதிகமாக இருப்பதால் ஈரல் உணவுகளை மிகக் குறைந்த அளவில் மட்டுமே மருத்துவரின் ஆலோசனையுடன் உட்கொள்வது பாதுகாப்பானது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"