இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, நேற்று (30) முதல் அமுலுக்கு வரும் வகையில் கடற்படையின் உயரிய தரநிலையான அட்மிரல் பதவிக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
காஞ்சன பானகொட, கடந்த 2024 டிசம்பர் 31 ஆம் தேதி இலங்கை கடற்படையின் 26ஆவது கடற்படைத் தளபதியாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, கடற்படை மரபுகளுக்கு அமைவாக தற்போது அட்மிரல் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப் படைகளின் பிரதம தளகர்த்தருமான அனுர குமார திசாநாயக்கவால் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
பதவியுயர்வைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதிக்கான பாரம்பரிய சிறப்பு மரியாதை அணிவகுப்பு இன்று கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கடற்படை அதிகாரிகள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று புதிய அட்மிரலுக்கு மரியாதை செலுத்தினர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக