BREAKING
கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள் கருணாவின் உத்தரவின் பேரில்தான் சுபாஷ் படுகொலை செய்யப்பட்டாரா? 39 ஆண்டுகளுக்குப் பின்னர் வெளியாகும் தகவல்கள் இந்திய விமான நிலையங்கள் ஊடாக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஈ-போர்டிங் பாஸ் நடைமுறை அறிமுகம் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 14.6 இலட்சத்தை கடந்தது இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய மக்கள் சர்வதேச சிவப்பு எச்சரிக்கையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ‘பஸ் லலித்’ - பலத்த பாதுகாப்பில் CCIBக்கு அழைத்துச்சென்ற அதிகாரிகள்

உலக சந்தை விலை குறைந்தாலும் உடனடி எரிபொருள் விலை குறைப்பு சாத்தியமில்லை என பிரதமர் தெரிவிப்பு

உலக சந்தை விலை குறைந்தாலும் உடனடி எரிபொருள் விலை குறைப்பு சாத்தியமில்லை என பிரதமர் தெரிவிப்பு

உலக சந்தையில் எரிபொருள் விலைகள் குறைந்துள்ள போதிலும், இலங்கையில் உடனடியாக எரிபொருள் விலையை குறைக்க முடியாது என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் விற்பனை செய்யப்படும் எரிபொருள் அதிக விலையில் இறக்குமதி செய்யப்பட்டதாகவும், அதன் செலவுச் சுமையின் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

உண்மையான செலவுக் கணக்கீட்டின்படி ஒரு லீட்டர் எரிபொருளின் விலை 700 ரூபாய்க்கும் அதிகமாக இருக்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும், இருப்பினும் அரசாங்கம் வழங்கும் நிவாரணம் காரணமாகவே அதனை சுமார் 400 ரூபாய் விலையில் மக்களுக்கு வழங்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உலக சந்தை நிலவரங்கள் மற்றும் உள்நாட்டு பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, விலை குறைப்புக்கான சாத்தியம் உருவாகும் முதல் சந்தர்ப்பத்திலேயே அதன் நன்மையை பொதுமக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

எரிபொருள் விலை நிர்ணயம் தொடர்பான முடிவுகள் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மை, இறக்குமதி செலவுகள் மற்றும் அரசாங்கத்தின் நிதி பொறுப்புகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"