BREAKING
பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு பரீட்சை விண்ணப்பங்களுக்கு இனி NIC கட்டாயம் – இலங்கை பரீட்சை திணைக்களம் புதிய அறிவிப்பு வெளியீடு அண்ணாமலை புதிய அரசியல் கட்சி அறிவிப்பு? டெல்லி பேச்சுவார்த்தைகளுக்கு பின் நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல் குவைத் விமான நிலையத்தில் ஈரான் தாக்குதல் – மூன்று இலங்கையர்கள் காயம்; தூதரகம் நிலைமை கண்காணிப்பு செம்மணி மனிதப் புதைகுழியில் தொடரும் அகழ்வு பணி – மேலும் மனித எலும்புக் குவியல்கள் கண்டெடுப்பு; மொத்த எண்ணிக்கை 275 ஆக உயர்வு நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து – பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு கொடூர தாக்குதல்: சிறுவர்கள் கைது வைரலான காணொளியால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு கொடூர தாக்குதல்: சிறுவர்கள் கைது வைரலான காணொளியால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

வவுனியா மாவட்டத்தின் இரட்டைப்பெரியகுளம் பகுதியில் இரண்டு மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொடூர தாக்குதல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் “வவுனியா சிங்கித்தி பாதாளய” என்ற பெயரில் காணொளி பரவியதைத் தொடர்ந்து, பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த 15 வயதுடைய இரண்டு மாணவர்கள் தற்போது வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட 7 மாணவர்களை இரட்டைப்பெரியகுளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட குறித்த சிறுவர்களை, எதிர்வரும் 10ஆம் திகதி வரை கெபிதிகொல்லேவ சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் வன்முறை மற்றும் சமூக ஊடக தாக்கம் குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"