சிலாபம், அம்பகதவில பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த 150 வெளிநாட்டவர்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். சர்வதேச அளவிலான பாரிய கணினி மற்றும் நிதி மோசடிகளில் இவர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சீன பிரஜைகள் ஆகும் நிலையில், வியட்நாம், தாய்வான் மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து 99 கணினிகள், 26 மடிக்கணினிகள் மற்றும் 259 கைப்பேசிகள் உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஒரு மாதத்திற்கு முன்பே அந்த விடுதியில் தங்கியிருந்த இவர்கள், விடுதிக்குள்ளேயே இருந்து இணையதளத்தை பயன்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டவர்கள் CID அதிகாரிகளால் மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் தீவிரமாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக