கடந்த 2010 – 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட விசாரணைகளின் ஒரு கட்டமாக, தனது சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களைச் சத்தியக்கடதாசி மூலம் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார். "மறைப்பதற்கு எதுவுமில்லை" எனக் கூறி அவர் ஆவணங்களை வழங்கத் தயாராக உள்ள நிலையில், தற்போது அவர் மீதான பழைய விமர்சனங்களை மக்கள் சமூக ஊடகங்களில் ஒப்பிட்டுப் பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி 'அரகலய' போராட்டங்கள் வெடித்த தருணத்தில், மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தைப் புனரமைப்பதற்காகச் சுமார் 540 மில்லியன் ரூபா பொதுப்பணம் செலவிடப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. தற்போதைய அரசாங்கம் ஒரு முழுமையான பேருந்து நிலையத்தைப் புனரமைக்கச் செலவிட்ட தொகையையும், மகிந்தவின் வீட்டுப் புனரமைப்புச் செலவையும் ஒப்பிட்டுச் சமூக வலைதளங்களில் மக்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். சொத்து விபரங்களைச் சமர்ப்பிப்பதன் மூலம் இவ்வாறான பாரிய செலவுகள் மற்றும் சொத்துகளின் உண்மைத்தன்மை வெளிவருமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக