2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையில் தமிழர் பகுதியில் இருந்து குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய மாணவர்களில் ஒருவராக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேசத்தின் முள்ளிப்பொத்தானையைச் சேர்ந்த கஸ்புல்லா அகமட் சிடான் திகழ்கிறார்.
வர்த்தகப் பிரிவில் கல்வி கற்ற இவர், தேர்வில் எழுதிய மூன்று பாடங்களிலும் A தரச் சித்திகளைப் பெற்று சிறப்பான பெறுபேறுகளை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் மாவட்ட மட்டத்தில் 10ஆம் இடத்தையும், தேசிய மட்டத்தில் 1946ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.
குறிப்பாக கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவராக இருந்தும், கடின உழைப்பும் விடாமுயற்சியும் மூலம் உயர்ந்த பெறுபேறுகளை அடைந்தது அனைவராலும் பாராட்டப்படுகிறது. இது அந்தப் பகுதியின் கல்வி முன்னேற்றத்திற்கும் ஒரு பெருமை சேர்த்துள்ளது.
முள்ளிப்பொத்தானை கல்வி சமூகமும், பொதுமக்களும் மாணவன் கஸ்புல்லா அகமட் சிடானுக்கு இதயம் கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன், எதிர்காலத்திலும் மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக