அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் கீழ் ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு இன்று (ஜூலை 3) முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதலாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 621,761 முதியோர் பயனாளர்களுக்காக மொத்தம் 3,108,805,000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட 76,139 முதியோர்களுக்காக 380,695,000 ரூபாய் அவர்களது அஸ்வெசும வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தகுதியுடைய பயனாளர்கள் இன்று முதல் தங்களது வங்கிக் கணக்குகள் ஊடாக ஜூன் மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை பெற்றுக்கொள்ள முடியும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக