மட்டக்களப்பு, மயிலம்பாவெளி பகுதியில் நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம் 6-இல் கல்வி கற்றுவந்த மகேந்திரன் ரயூவன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தில் பங்கேற்றுவிட்டு, தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, பிரதான வீதியைக் கடக்க முற்பட்ட வேளையில் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் சிறுவன் மீது மோதியுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் உறவினர் ஒருவரின் மரண வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நசீர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக