யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பகுதியைச் சேர்ந்த திருவேந்தன் சாய்ராம் என்ற 11 வயது சிறுவன் காணாமல் போயுள்ளதாக அவசரத் தகவல் வெளியாகியுள்ளது. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் கல்வி பயிலும் இம்மாணவன் தொடர்பில் இதுவரை எவ்விதத் தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை. இச்சம்பவம் குறித்துத் தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து தேடுதல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
காணாமல் போன சிறுவன் தொடர்பான ஏதேனும் தகவல்கள் அல்லது துப்பு கிடைத்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது அவரது உறவினர்களுக்கோ தகவல் வழங்குமாறு உருக்கமாகக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சிறுவனின் புகைப்படம் மற்றும் அடையாள விபரங்கள் சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக