மலேசியாவின் பினாங்கு (Penang) பகுதியில் உள்ள சீன மயானம் ஒன்றில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பட்டப்பகலில் அரங்கேறிய அநாகரீகச் செயல் அந்நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் 58 வயதுடைய ஜெகதீசன் மற்றும் 37 வயதுடைய ஹலிலா அபு பக்கர் ஆகிய இருவரும் பொது இடத்தில் தகாத முறையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அந்த வழியாகச் சென்ற நபர் ஒருவர் தனது அலைபேசியில் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதைத் தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாகி பொதுமக்களிடையே கடும் கண்டனங்களைப் பெற்றது.
இதனையடுத்து, பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இருவர் மீதும் பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டமை மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, பொது இடங்களில் இவ்வாறான ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இதுவொரு பாடமாக அமைய வேண்டும் என்று சுட்டிக்காட்டியதுடன், இருவருக்கும் தலா ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக