அவிசாவளைப் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் மின்சாரத்துறை அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க, தற்போதைய அரசாங்கத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தரமற்ற நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டதன் மூலம் நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் இயந்திரங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும், இதனால் மின்சார சபைக்கு ஏற்பட்டுள்ள நேரடி நிதி இழப்பு குறித்தும் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நாடாளுமன்றக் குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மோசடி தொடர்பாக எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மற்றும் நிலக்கரி நிறுவனத் தலைவர் மீது மட்டும் பழியைப் போட முடியாது என்றும், அமைச்சரவையின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதியும் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கடந்த காலங்களில் ஊழலுக்கு எதிராகப் பேசி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது அதே போன்ற மோசடிகளில் ஈடுபடுவது மக்கள் நம்பிக்கையைச் சிதைத்துள்ளதாக அவர் சாடினார். குறிப்பாக, சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் எதிர்கால மின் துண்டிப்பு அபாயம் உள்ளிட்ட நான்கு பிரதான விடயங்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள போதிலும், ஜனாதிபதி இது குறித்து மௌனம் காப்பது கண்டிக்கத்தக்கது என அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக