மட்டக்களப்பு கொம்மாதுறையில் விபத்து: ஒருவர் படுகாயம்!
வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளும் கொம்மாதுறை பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில், பின்னால் வேகமாக வந்த பேருந்து மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
இவ் விபத்தின் போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற நபரின் கால் பகுதியில் பலத்த உடைவு ஏற்பட்டுள்ளது.
விபத்தைத் தொடர்ந்து காயமடைந்தவர் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக