ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சித் தலைமையகத்தில் நேற்று (24.03.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, அரசாங்கத்திற்கு எதிரான அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து விளக்கமளித்தார். இம்முறை மே மாதம் முதலாம் திகதி வெசாக் தினமாக அமைவதனால், வழமையான மே தின ஊர்வலங்களைத் தவிர்த்து, தொழிலாளர் வர்க்கத்தினருக்காக நாடு தழுவிய ரீதியில் ஆசீர்வாத பூஜைகளை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தின் "மக்கள் விரோத" செயற்பாடுகள் மற்றும் முறையற்ற நிர்வாகத்தினால் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மே மாதம் 22 ஆம் திகதி கொழும்பில் மாபெரும் எதிர்ப்புப் பேரணி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களே இன்று தமது முடிவிற்காக வருந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், மக்களின் அந்த அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இந்தப் போராட்டம் அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக