BREAKING
டீயுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை முட்டையை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? உணவு பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு கிராமத்து சுவையில் மணம்கொஞ்சும் கருவாட்டு குழம்பு: எளிய முறையில் செய்வது எப்படி? 'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார் டீயுடன் இந்த 5 உணவுகளை சேர்த்து சாப்பிடாதீர்கள்! உடல்நல பாதிப்புகள் குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை முட்டையை சமைப்பதற்கு முன் கழுவ வேண்டுமா? உணவு பாதுகாப்பு குறித்து தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் அனுராதபுர குண்டுத்தாக்குதல் வழக்கு: பிரபாகரன் வழங்கியதாகக் கூறப்படும் பொருட்களை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு கிராமத்து சுவையில் மணம்கொஞ்சும் கருவாட்டு குழம்பு: எளிய முறையில் செய்வது எப்படி? 'காதல் சொல்ல வந்தேன்' நடிகர் யுதன் பாலாஜி தற்போது ஆஸ்திரேலியாவில் சைபர் பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வருகிறார்

மத்திய கிழக்கில் மோதல்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை

மத்திய கிழக்கில் மோதல்: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட உரை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (20) நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து அவர் நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்க உள்ளார்.

கடந்த 17ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சபை முதல் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதி உரை நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பின் அவர்களுடன் கலந்துரையாடலும் நடைபெற வாய்ப்பு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால், அதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், எரிசக்தி அமைச்சர் குமார ஜெயகோடிக்கு எதிராக எதிர்க்கட்சியால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் அடுத்த மாதம் 10ஆம் திகதி நடைபெறும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சி 36 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"