BREAKING
விக்கெட்டுக்கு பிறகு ‘சீக்ரெட் நோட்’ காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா கேன்ஸ் விழாவில் கவர்ச்சி தோற்றத்தில் கலக்கிய கல்யாணி பிரியதர்ஷன் முதல் நாளே மாஸ் காட்டிய ‘கருப்பு’ : உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் மாத்தறையில் முச்சக்கர வண்டி விபத்து : 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு சுன்னாகம் - புத்தூர் வீதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக மூடல் விக்கெட்டுக்கு பிறகு ‘சீக்ரெட் நோட்’ காட்டிய ஆகாஷ் சிங் : நெகிழ்ந்த சஞ்சீவ் கோயங்கா கேன்ஸ் விழாவில் கவர்ச்சி தோற்றத்தில் கலக்கிய கல்யாணி பிரியதர்ஷன் முதல் நாளே மாஸ் காட்டிய ‘கருப்பு’ : உலகளவில் ரூ. 35 கோடிக்கும் மேல் வசூல் மாத்தறையில் முச்சக்கர வண்டி விபத்து : 4 வயது சிறுவன் பரிதாப உயிரிழப்பு சுன்னாகம் - புத்தூர் வீதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தற்காலிகமாக மூடல்

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி அநுராவின் விசேட உரை

நாடாளுமன்றத்தில் இன்று ஜனாதிபதி அநுராவின் விசேட உரை

ஜனாதிபதி Anura Kumara Dissanayake இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றவுள்ளார்.

இது தொடர்பாக கடந்த 17ஆம் திகதி நடைபெற்ற சபை அமர்வில் சபை முதல் Bimal Rathnayake அறிவிப்பொன்றை வெளியிட்டிருந்தார். அதன்படி இன்றைய அமர்வில் ஜனாதிபதி உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த அமர்வின் போது எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடலிலும் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலை காரணமாக இலங்கையிலும் எரிபொருள் மற்றும் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளன.

இந்த நிலைமையால் பொதுமக்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதுடன், நாட்டின் பொருளாதார நிலை குறித்து பொருளாதார நிபுணர்களும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியில், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையை முன்னிட்டு நாட்டின் நிலைமை குறித்து ஜனாதிபதி Anura Kumara Dissanayake இன்றைய நாடாளுமன்ற அமர்வில் விரிவாக விளக்கமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"