நடிகர் R. Parthiban எப்போதும் வித்தியாசமான கருத்துகள் மற்றும் பேச்சுகளால் கவனம் ஈர்ப்பவர் என ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார். சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறிய கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் நடிகை Trisha Krishnan அவர்களின் புகைப்படம் திரையில் காட்டப்பட்டபோது, அதை பார்த்த பார்த்திபன், “இந்த குந்தவை வீட்டிலேயே குந்த வைத்து இருப்பது நல்லது” என நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு அங்கு இருந்த சிலர் கைத்தட்டி ஆதரவு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கருத்து குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், அதற்கு நடிகை திரிஷா மறைமுகமாக பதிலளித்துள்ளார்.
அதாவது, யாரோ ஒருவரின் பேச்சை கேட்டு இவ்வாறு கூறியதாக தகவல் கிடைத்ததாகவும், ஒரு கருத்தை மைக்ரோபோனில் புத்திசாலித்தனமாகவும் நகைச்சுவையாகவும் கூற முடியவில்லை என்றால் அது முட்டாள்தனத்தையே வெளிப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
திரிஷாவின் இந்த மறைமுக பதிலடி தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. ரசிகர்கள் பலரும் இதுகுறித்து தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக