BREAKING
இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்! இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் குதிக்கும் பொது சுகாதார பரிசோதகர்கள்! அந்த பெண் நானில்லை!” வைரல் வீடியோ குறித்து அமைச்சர் கீர்த்தனா விளக்கம் டாலருக்கு ஏன் ‘D’ இல்லை? $ சின்னம் உருவான சுவாரஸ்யமான வரலாறு! யாழில் 3 வர்த்தக நிலையங்களுக்கு ரூ.6.68 இலட்சம் அபராதம்! அதிக விலைக்கு பொருட்கள் விற்றதால் அதிரடி நடவடிக்கை ரேவதி நட்சத்திரத்தில் சனிபகவான் சஞ்சாரம்: இந்த 3 ராசிகளுக்கு பணம், வேலை, வாழ்வில் முன்னேற்றம்!

கேரளாவில் ஹொட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்மருமகன் உயிரிழப்பு உணவு பாதுகாப்பு துறை விசாரணை

கேரளாவில் ஹொட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்மருமகன் உயிரிழப்பு உணவு பாதுகாப்பு துறை விசாரணை

கேரள மாநிலத்தின் கொல்லம் மாவட்டம், நிலமேல் (Nilamel) பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஷாஜி மற்றும் அவரது மாமியார் 58 வயதுடைய ரஷீதா பீவி ஆகியோர் ஹொட்டலில் உணவருந்தியதையடுத்து ஏற்பட்ட உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

நேற்று முன்தினம் இரவு, ஷாஜி தனது மனைவி சஜினா, மாமியார் மற்றும் இரு குழந்தைகளுடன் காரில் விழிஞ்ஞம் பகுதியில் உள்ள ஹொட்டல் ஒன்றிற்கு உணவருந்தச் சென்றுள்ளனர். கார் ஓட்டுநர் உட்பட மொத்தம் ஆறு பேர் அங்கு மீன் குழம்பு உணவாக எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உணவருந்தி வீடு திரும்பும் வழியில் ஷாஜி, அவரது மனைவி மற்றும் மாமியாருக்கு திடீரென மயக்கம் மற்றும் வாந்தி போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் பாரிப்பள்ளி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதிலும், ஷாஜி மற்றும் அவரது மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சஜினா மேலதிக சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கெட்டுப்போன மீன் குழம்பை உணவாக எடுத்துக்கொண்டதன் காரணமாகவே இந்த துயர சம்பவம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்பு துறையினரும், பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"