கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி வரும் பெண் ஒருவர் காரில் இருந்து இறங்குவது போன்ற காணொளி தொடர்பாக அமைச்சர் கீர்த்தனா விளக்கம் அளித்துள்ளார்.
தனது எக்ஸ் தளப் பதிவில், வைரலாகும் காணொளியில் இருப்பது தான் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளை, அந்த காணொளியில் இருப்பவர் தான் என்றாலும், ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது தனிப்பட்ட மகிழ்ச்சியை வைத்து விமர்சிப்பது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்கள் தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையை மையமாகக் கொண்டு போலியான கதைகளை உருவாக்குவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
பெண்களுக்கு எதிரான இழிவான கருத்துகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் போக்கை கண்டித்துள்ள அமைச்சர் கீர்த்தனா, இந்த விவகாரம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை சமூக வலைதளப் பதிவு மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக