BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! ஹோட்டலில் நடந்த தாக்குதல் - இந்தியர் கைது

பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! ஹோட்டலில் நடந்த தாக்குதல் - இந்தியர் கைது

இலங்கைக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட கைகலப்பில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்ட மாவட்டத்தின் திஸ்ஸமஹாராம பகுதியில் அமைந்துள்ள ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மகாசென்புர பகுதியில் உள்ள குறித்த நிலையத்திற்கு சென்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண், அந்த நிலையத்தின் உரிமையாளரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் நியாயம் கேட்க குறித்த ஆயுர்வேத நிலையத்திற்குச் சென்ற இந்தியப் பிரஜைக்கும், அதன் உரிமையாளருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது வன்முறையாக மாறியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, மசாஜ் நிலைய உரிமையாளர் 119 என்ற பொலிஸ் அவசர இலக்கத்திற்கு முறைப்பாடு செய்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற திஸ்ஸமஹாராம பொலிஸார், கைகலப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்தியப் பிரஜையை கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் சிகிச்சைக்காக தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாகக் கூறப்படும் பிரெஞ்சு பெண் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"