மீகஹாவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புது கண்டி வீதியின் தெல்கொட பகுதியில் முச்சக்கர வண்டியும் காரும் மோதிக்கொண்ட கோர விபத்தில், 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று பிற்பகல் பியகமவில் இருந்து தெல்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியில் வலதுபுறமாக திரும்ப முற்பட்டபோது, எதிர்திசையில் பயணித்த கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி, இரு பெண்கள் மற்றும் இரு சிறுவர்கள் பலத்த காயமடைந்த நிலையில் உடுப்பில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி முச்சக்கர வண்டி சாரதி, 39 வயதுடைய பெண் மற்றும் அவரது 7 வயது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த முச்சக்கர வண்டி சாரதி தெல்கொட பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் எனவும், உயிரிழந்த பெண்ணும் அவரது மகளும் சியம்பலாப்ப பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, விபத்தில் காயமடைந்த காரில் பயணித்த சிறுமி மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மீகஹாவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக