உலகின் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையான குகை ஓவியம் இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த குகை ஓவியம் சுமார் 67,800 ஆண்டுகள் பழமையானது என தொல்பொருள் ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதிக்கருகே அமைந்துள்ள முனா தீவில் உள்ள ஒரு குகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது,
சுண்ணாம்புக் குகையின் சுவரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
குகையின் சுவரில் காணப்படும் சிவப்பு நிற கை அச்சு ஓவியம், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாறை ஓவியங்களில் மிகவும் பழமையானதாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும்,
பறவைகளின் தலைகள் மற்றும் பிற விலங்குகளின் அம்சங்களை கொண்ட மனித உருவ ஓவியங்களும் அங்கு காணப்படுகின்றன.
ஆய்வுகளின் அடிப்படையில்,
குகைச் சுவரில் கைகளை வைத்து அதன் மேல் இயற்கை நிறமிகளை ஊற்றி இந்த ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சில கை ஓவியங்களில் விரல் நுனிகள் கூர்மையாக தெரியும் வகையில் மாற்றியமைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த குகை ஓவியம் ஸ்பெயினில் கண்டுபிடிக்கப்பட்ட 66,700 ஆண்டுகள் பழமையான நியண்டர்தால் கை அச்சை விடவும் பழமையானது என்பதால்,
மனித வரலாறு மற்றும் கலை வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுகளில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக