ஹொரண - களுகே மோதர பிரதேசத்தில் பாரியளவில் இடம்பெற்று வந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு மற்றும் கடத்தல் நடவடிக்கையை வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் திடீர் சோதனையின் போது, சட்டவிரோத அகழ்வில் ஈடுபட்டிருந்த மூன்று இரத்தினக்கல் வணிகர்கள் உட்பட மொத்தம் 25 சந்தேக நபர்கள் கைதாகியுள்ளனர்.
இந்த அதிரடி சோதனையின் போது, கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 11 படகுகள், 5 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மாணிக்கக்கல் அகழ்வுக்காகப் பயன்படுத்தப்பட்ட சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பிலான நவீன உபகரணங்கள் என்பவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக