கனடாவில் அமெரிக்க எல்லையினூடே சரக்கு லொரிகள் மூலம் இடம்பெற்று வந்த பாரிய போதைப்பொருள் கடத்தலை முறியடிக்கும் வகையில், கனடா பொலிஸார் 'புரஜெக்ட் பே' (Project Bay) எனும் சிறப்புச் சோதனையை முன்னெடுத்துள்ளனர். ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டன், விண்ட்சர், மார்க்கம், கலேடன் உட்பட 22 இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தீவிர அதிரடிச் சோதனையில், சுமார் 1.7 தொன் எடையுள்ள கொக்கைன், மெத்தம்பெட்டமைன் மற்றும் ஓப்பியம் போன்ற ஆபத்தான போதைப்பொருட்களுடன் 17 துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் 1,039 கோடி (139 மில்லியன் கனடிய டொலர்) எனப் பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர். வணிக ரீதியிலான லொரிப் போக்குவரத்தைப் பயன்படுத்திச் சட்டப்பூர்வப் பொருட்களுக்குள் மறைத்து வைத்துப் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டின்கீழ் மொத்தம் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லொரி ஓட்டுநர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடத்தல் பின்னணியில் உள்ள ஏனைய நபர்களைக் கைது செய்ய அமெரிக்க - கனடிய பொலிஸார் தீவிர கூட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக