BREAKING
வெளியீட்டுக்கு முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜனநாயகன்’; வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கிற்கு அமோக வரவேற்பு கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்; மேலும் இரண்டு மாகாணங்கள் தொற்று மண்டலங்களாக அறிவிப்பு நாமல் ராஜபக்ச தொடர்பில் அவதூறு பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் வாடகை வீட்டில் வாழ்ந்த எஸ். ஜானகி! இதற்கு பின்னால் இருந்த உண்மை என்ன? நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு வெளியீட்டுக்கு முன்பே வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜனநாயகன்’; வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கிற்கு அமோக வரவேற்பு கொங்கோவில் எபோலா வைரஸ் பரவல் தீவிரம்; மேலும் இரண்டு மாகாணங்கள் தொற்று மண்டலங்களாக அறிவிப்பு நாமல் ராஜபக்ச தொடர்பில் அவதூறு பரப்பப்படுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு கோடிக்கணக்கில் சொத்து இருந்தும் வாடகை வீட்டில் வாழ்ந்த எஸ். ஜானகி! இதற்கு பின்னால் இருந்த உண்மை என்ன? நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற ஆம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

நுவரெலியா மாவட்டத்தின் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வோல்ட்றீம் தோட்டப் பகுதியில் அமைந்துள்ள ஆற்றில் நீராடச் சென்ற 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துயரச் சம்பவம் இன்று (13.07.2026) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மாணவன் லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாடசாலை பரீட்சை நிறைவடைந்த பின்னர், நண்பர்களுடன் இணைந்து ஆற்றில் நீராடச் சென்றபோது எதிர்பாராத விதமாக மாணவன் நீரில் மூழ்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் மொத்தம் பத்து மாணவர்கள் ஆற்றுப் பகுதிக்கு சென்றிருந்ததாகவும், அவர்களில் குறித்த மாணவன் நீரின் வேகமான ஓட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டதாகவும் ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பான தகவல் கிடைத்தவுடன் லிந்துலை பொலிஸார், பிரதேச மக்கள் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். மேலும், சுழியோடிகளின் உதவியுடன் ஆற்றில் தீவிர தேடுதல் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"