தமிழகத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்து இந்திய அரசின் பல்வேறு உத்தியோகபூர்வ ஆவணங்களை சட்டவிரோதமாகப் பெற்றதாக குற்றச்சாட்டில் இலங்கைத் தமிழர் ஒருவர் இந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தங்கவேல் புகழேந்திரன் (39) என்ற நபர், தமிழகத்தின் சின்னசேலம் பகுதியில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்ட புகழேந்திரன், அதன் பின்னர் தனது மதத்தை மாற்றியதுடன், "மொஹமட் சபீர்" என்ற பெயரிலும் வாழ்ந்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த புதிய அடையாளத்தை பயன்படுத்தி, தன்னை இந்திய குடிமகனாகக் காட்டியதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் கடந்த சில ஆண்டுகளில்:
உள்ளிட்ட இந்திய அரசின் முக்கிய அடையாள ஆவணங்களை சட்டவிரோதமாகப் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த ஆவணங்களை பயன்படுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு அரச சேவைகள் மற்றும் நலத்திட்டங்களையும் பெற்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணையில் மேலும் வெளிவந்த தகவலின்படி, மறுவாழ்வு முகாமில் புகழேந்திரன் என்ற பெயரிலும், முகாமிற்கு வெளியே மொஹமட் சபீர் என்ற பெயரிலும் இரட்டை அடையாளத்தை பயன்படுத்தி வந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த முறையின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இந்திய உளவுத்துறையிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி காவல்துறையினர் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
தற்போது,
என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் இந்திய காவல்துறை மற்றும் உளவுத்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் இந்தியாவில் வசிக்கும் அகதிகளின் அடையாளச் சரிபார்ப்பு மற்றும் அரச ஆவணங்கள் வழங்கும் நடைமுறைகள் தொடர்பிலும் புதிய கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக