BREAKING
நாடாளுமன்றத்தில் அநாகரிக வார்த்தைப் பிரயோகம் குற்றச்சாட்டு; கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை கோரி அர்ச்சுனா முறைப்பாடு காலி மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை அமைப்பு; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு அம்மாவின் 70வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய நடிகை த்ரிஷா... மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா? மருத்துவர்கள் கூறும் உண்மை பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மரின் லெ பெனுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி நாடாளுமன்றத்தில் அநாகரிக வார்த்தைப் பிரயோகம் குற்றச்சாட்டு; கஜேந்திரகுமார் மீது நடவடிக்கை கோரி அர்ச்சுனா முறைப்பாடு காலி மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை அமைப்பு; அதிவிசேட வர்த்தமானி வெளியீடு அம்மாவின் 70வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடிய நடிகை த்ரிஷா... மடிக்கணினியை மடியில் வைத்துப் பயன்படுத்தினால் புற்றுநோய் வருமா? மருத்துவர்கள் கூறும் உண்மை பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மரின் லெ பெனுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி

நீர்கொழும்பு சிறையில் டெங்குவால் கைதிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய்யானது; சுகாதார அமைச்சர் விளக்கம்

நீர்கொழும்பு சிறையில் டெங்குவால் கைதிகள் உயிரிழந்ததாக வெளியான தகவல் பொய்யானது; சுகாதார அமைச்சர் விளக்கம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் டெங்கு காய்ச்சலால் சுமார் 40 கைதிகள் உயிரிழந்ததாக சமூக ஊடகங்கள் மற்றும் சில தளங்களில் வெளியாகிய தகவல்களை சுகாதார அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ முற்றிலும் மறுத்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் நோக்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், டெங்கு நோயால் 40 கைதிகள் உயிரிழந்ததாக கூறப்படும் தகவல்களுக்கு எந்தவிதமான உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஒரே நேரத்தில் இவ்வளவு பேர் உயிரிழந்திருந்தால் அது உடனடியாக அதிகாரப்பூர்வமாக பதிவாகியிருக்கும் என்றும், அத்தகைய சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சிறைக்கைதிகளில் ஒருவருக்கு மட்டுமே டெங்கு நோய் உறுதி செய்யப்பட்டு அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறை மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை போதுமானதாக இல்லாத சூழலில், நோயாளிகள் அருகிலுள்ள அரச மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெறுவது வழக்கமான நடைமுறையாக இருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார்.

அத்துடன், மருத்துவர்கள் அல்லது சுகாதாரப் பணியாளர்களின் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழந்ததாக எந்தவிதமான தகவலும் இல்லை என்றும், டெங்கு காரணமாக 40 கைதிகள் உயிரிழந்ததாக பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"