உடல் ஆரோக்கியமாக இல்லாதபோது சில எச்சரிக்கை அறிகுறிகள் நமக்குத் தெரியாமல் தினசரி வாழ்க்கையில் வெளிப்பட ஆரம்பிக்கும். காலை எழுந்தவுடன் நாக்கில் வெள்ளை படலம் காணப்படுவது, போதுமான தூக்கம் எடுத்த பிறகும் உடல் சோர்வாக இருப்பது, உணவு சாப்பிட்ட உடனே தூக்கம் வருவது போன்றவை உடலின் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றன.
மேலும், வாய் துர்நாற்றம், அடிக்கடி முகப்பருக்கள் தோன்றுதல், செரிமான கோளாறு, மலம் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளும் உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு இருப்பதை சுட்டிக்காட்டலாம். குறிப்பாக உணவு சாப்பிட்ட பின்னரும் அடிக்கடி பசி எடுப்பது அல்லது இனிப்பு உணவுகளுக்கான ஆசை அதிகரிப்பது, சர்க்கரை நோய் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு ஆரம்ப அறிகுறிகளாக இருக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உணவுமுறை, தூக்க பழக்கம், உடற்பயிற்சி மற்றும் தண்ணீர் அருந்தும் பழக்கத்தில் கவனம் செலுத்துவது அவசியம். தொடர்ந்து பிரச்சனை நீடித்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது சிறந்த தீர்வாகும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக