கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், பெண்களை அவர்களின் அனுமதி இல்லாமல் ரகசியமாக படம் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட 39 வயது நபருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
விசாரணையில், 2017 முதல் 2023 வரை விக்டோரியா மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் மற்றும் சிறுமிகளை அவர் மறைமுகமாக வீடியோ எடுத்தது தெரியவந்துள்ளது.
பின்னர் போலீஸ் விசாரணையில், அவரது மின்னணு சாதனங்களில் ஆயிரக்கணக்கான புகைப்படங்கள் மற்றும் 28 மணி நேரத்திற்கும் அதிகமான வீடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. மொத்தமாக 650க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டதாகவும், அதில் சிலர் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்து, அவருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. மேலும் அவரது DNA மாதிரியை பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் சேர்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக