BREAKING
தவெக அமைச்சரவையில் புதிய மாற்றம்: வன்னியரசு அமைச்சராகிறார் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு கனடாவில் அதிர்ச்சி வழக்கு: 650க்கும் மேற்பட்ட பெண்களை ரகசியமாக படம் பிடித்த நபருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதலமைச்சர் விஜயின் புதிய ஆலோசகர்கள் நியமனம்: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம் என தகவல் – அரசியல் சர்ச்சை வெடிப்பு தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? உண்மையான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் எச்சரிக்கைகள் வெட்டிய உடனே சில காய்கறிகளை சமைக்கக்கூடாதா? உண்மை என்ன? தவெக அமைச்சரவையில் புதிய மாற்றம்: வன்னியரசு அமைச்சராகிறார் என தொல்.திருமாவளவன் அறிவிப்பு கனடாவில் அதிர்ச்சி வழக்கு: 650க்கும் மேற்பட்ட பெண்களை ரகசியமாக படம் பிடித்த நபருக்கு 4.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதலமைச்சர் விஜயின் புதிய ஆலோசகர்கள் நியமனம்: ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி நியமனம் என தகவல் – அரசியல் சர்ச்சை வெடிப்பு தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? உண்மையான ஆரோக்கிய நன்மைகள் மற்றும் எச்சரிக்கைகள் வெட்டிய உடனே சில காய்கறிகளை சமைக்கக்கூடாதா? உண்மை என்ன?

மகளை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் வீசிய தந்தை - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

மகளை துண்டு துண்டாக வெட்டி ரயிலில் வீசிய தந்தை - உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மகளை ஆணவக் கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி தகர பெட்டியில் அடைத்து ரயிலில் வீசிய அதிர்ச்சி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 17ஆம் தேதி கோமதி நகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலின் ஸ்லீப்பர் பெட்டியில் இருந்த தகரப் பெட்டியில் சிறுமியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கொல்லப்பட்டவர் 15 வயது சிறுமி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணையில், குறித்த சிறுமி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததால் ஏற்பட்ட குடும்ப எதிர்ப்பின் காரணமாக அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் இணைந்து இந்த கொடூரமான கொலை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலைக்குப் பிறகு அடையாளம் தெரியாமல் இருக்க உடல் பாகங்களை தனித்தனியாக வெட்டி, சில பகுதிகளை தகர பெட்டியிலும் சிலவற்றை பைகளிலும் அடைத்து ரயிலில் வீசியதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

சிசிடிவி காட்சிகள் மற்றும் பயணிகள் வாக்குமூலத்தின் அடிப்படையில் தந்தை, சகோதரி மற்றும் மைத்துனர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொடூர சம்பவம் சமூக வலைதளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"