கடந்த ஆண்டில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறியுள்ளதாக புதிய உத்தியோகப்பூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக நிகர குடியேற்ற அளவு கோவிட் காலத்திற்குப் பிந்தைய மிகக் குறைந்த நிலைக்கு சரிந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரவுகளின்படி, கடந்த ஆண்டில் பிரித்தானிய மக்கள் தொகையில் சுமார் 171,000 பேர் மட்டுமே அதிகரித்துள்ளனர். இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிசமான வீழ்ச்சியாகும். அதே நேரத்தில் 2025ஆம் ஆண்டில் மட்டும், குடியேறியவர்களை விட 136,000க்கும் அதிகமான பிரித்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இளம் பிரித்தானியர்களிடையே இந்த வெளியேற்றம் அதிகமாக இருப்பதாகவும், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணி விடுமுறை விசாக்களில் செல்வோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவும் தரவுகள் காட்டுகின்றன. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் அவுஸ்திரேலியாவில் வாழும் பிரித்தானிய இளைஞர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக உயர்ந்துள்ளது.
கடுமையான விசா விதிமுறைகள், திறன் விசாக்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள வரம்புகள், மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைக்கும் கட்டுப்பாடுகள் ஆகியவை இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன. அதேபோல் படிப்புக்குப் பிந்தைய விசா காலம் குறைக்கப்பட்டதும் இளைஞர்கள் வெளியேறுவதற்கான ஒரு காரணமாக உள்ளது.
இதன் விளைவாக பிரித்தானியாவின் குடியேற்றக் கட்டமைப்பு மற்றும் தொழில்சார் சந்தை இரண்டிலும் தாக்கம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக